Home தென்னிலங்கைச் செய்திகள் ஐ.நாவின் புதிய பிரேரணை: அரசின் நிலைப்பாடு என்ன?
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.நாவின் புதிய பிரேரணை: அரசின் நிலைப்பாடு என்ன?

Share
Share

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாவுக் கூட்டத் தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடைப்பட்ட காலப் பகுதியில், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு அறிவிக்கும்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஆண்டுகளில் எமது நாட்டில் காணப்பட்ட ஜனநாயக மீறல்கள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிலைமை தற்போது கணிசமானளவு மாற்றமடைந்துள்ளது என்று சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் அந்த அடிப்படையிலேயே அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதேபோன்று அவர்கள் தரப்பில் சில கண்காணிப்புக்களும் காணப்படுகின்றன. அரசும், வெளிவிவகார அமைச்சும் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பமாக முன்னர் அல்லது அதற்கிடையில் இது தொடர்பில் அரசு அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...