Home தென்னிலங்கைச் செய்திகள் எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து! 15 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து! 15 பேர் மரணம்!

Share
Share

எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 06 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால், அதிலிருந்தவர்கள் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு புதர்களுக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காயமடைந்தவர்களை மீட்க காவல்துறை, காவல்துறை சிறப்புப் படை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட ஏராளமான பொது மக்கள் பணியாற்றி வருகின்றனர். 

தங்காலையில் இருந்து எல்லவுக்குச் சுற்றுலாவிற்கு வந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று, தங்காலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...