Home தென்னிலங்கைச் செய்திகள் எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து! 15 பேர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியில் விபத்து! 15 பேர் மரணம்!

Share
Share

எல்ல – வெல்லவாய வீதியின் 15 ஆவது மைல்கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 06 பேர் சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால், அதிலிருந்தவர்கள் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு புதர்களுக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

காயமடைந்தவர்களை மீட்க காவல்துறை, காவல்துறை சிறப்புப் படை, ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட ஏராளமான பொது மக்கள் பணியாற்றி வருகின்றனர். 

தங்காலையில் இருந்து எல்லவுக்குச் சுற்றுலாவிற்கு வந்த தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று, தங்காலை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ரணில் – சஜித் அணிகள் இணைந்து செயற்பட முடிவு – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று...

இலங்கைக்கு கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 7 நாட்களில் 37 ஆயிரத்து 495 சுற்றுலாப் பயணிகள்...

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தை அடைய முடியும் – கூட்டத் தொடரில் விஜித ஹேரத் தெரிவிப்பு!

“இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம். சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கின்றோம். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும்...