Home தென்னிலங்கைச் செய்திகள் பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பெக்கோ சமனின் மனைவிக்கு செப். 18 வரை விளக்கமறியல்!

Share
Share

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷாடிகா லக்ஷானி என்பவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ , ‘பாணந்துறை நிலங்க’ மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி கடந்த 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலகக் கும்பல் கடந்த மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம் மாலை ஆணொருவரின்...

ஒரு புறம் கொலை! மறுபுறம் மிரட்டல்!! – அரசைக் கடுமையாகச் சாடுகின்றார் சஜித்

“நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து...

அரசியல் கைதிகளின் விடுவிப்பை வலியுறுத்தி காசியிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்ட விடுதலை நீர்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித...

செம்மணி விவகாரம்; ஐ.நா பேரவையிடம் விளக்குகிறதாம் அரசாங்கம்!

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை காலை நாட்டிலிருந்து...