Home தென்னிலங்கைச் செய்திகள் ரணில் – சஜித் தரப்புக்களுடன் கூட்டணி இல்லை என்கிறது பொதுஜன பெரமுன!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணில் – சஜித் தரப்புக்களுடன் கூட்டணி இல்லை என்கிறது பொதுஜன பெரமுன!

Share
Share

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றுடன் பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே
அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒருமித்த கொள்கைகளைக்கொண்ட கட்சிகளாகும்.

இவற்றில் இருந்து பொதுஜன பெரமுன கட்சி முற்றிலும் மாறுபட்ட கட்சியாகும்.

மேற்படி கட்சிகளினதும், எமது கட்சியினதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.

எனவே, எந்த சூழ்நிலையிலும் எமது கட்சி, மேற்படி இரு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காது. எமது கட்சியின் பயணம் மக்கள் விரும்பும் வகையில் தனிவழியில் தொடரும்.

பொதுஜன பெரமுனக் கட்சியின் கொள்கைகளை ஏற்கும் தரப்பினர் மாத்திரமே எம்முடன் இணைய முடியும்.

கடந்த காலங்களில் எம்முடன் கூட்டணி வைத்திருந்தவர்கள் கூட்டணி உறவை
தொடர்வதில் எவ்வித தடையும் இல்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று கைது...

இலங்கையில் அனர்த்தம்; ஐ.நா அவவசரகால ஒருங்கிணைப்புச் செயல்முறை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் அனர்த்தநிலைமைக்கு நிவாரணம் அளிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் தனது அவசரகால ஒருங்கிணைப்பு...

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...