தமிழ்க் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ். மருதனார்மடத்தில் நடைபெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் இந்தக் கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



Leave a comment