Home தாயகச் செய்திகள் மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!

Share
Share

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்கச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டனர்.

முதியவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி மிக மோசமான முறையில் அவர்களை அங்கிருந்து பொலிஸார் அப்புறப்படுத்தினர்.

அதேவேளை, இந்தச் சம்பவத்தைச் செய்தியாக்க முயன்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி துரத்தியடித்தனர்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்போது, கடந்த 35 வருடங்களுக்கு மேலாகத் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாகக் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மயிலிட்டிப் பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் கவனவீர்ப்புப் போராட்டத்தை நடத்த முயன்றனர்.

இதையடுத்து அங்கு வந்த பொலிஸார், முதியவர்கள் – பெண்கள் என்ற வேறுபாடுகள் இன்றி, அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி, அவர்களைத் தமது பலத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்றி, பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தள்ளி, தகாத வார்த்தைகளால் பேசி அப்புறப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தைச் செய்தியாக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்.

மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்க வந்த வேளை, எமது காணிகளை விடுவியுங்கள் என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடத்த முற்பட்ட போது கடந்த கால அரசு போன்றே, பொலிஸார் எம் மீது காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதே பொலிஸார் எம்முடன் நடந்து கொண்ட விடயம் சான்று பகிர்கின்றது எனக் காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...