யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
முன்னதாக, “யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார, செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியையும் பார்வையிடலாம்.” – என்று அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,
இது தொடர்பில் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ். நிரஞ்சனிடம் கேட்டபோது, “அவ்வாறான தகவல் எதுவும் இதுவரை (நேற்று வரை) நீதிமன்றத்துக்கு அறிவிக்ப்படவில்லை.” – என்று கூறினார்.
இந்தநிலையில், இன்றும் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment