Home தென்னிலங்கைச் செய்திகள் வீட்டு உணவுதான் வேண்டும் – சிறையில் அடம்பிடிக்கும் ராஜித!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வீட்டு உணவுதான் வேண்டும் – சிறையில் அடம்பிடிக்கும் ராஜித!

Share
Share

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ராஜித சேனாரத்னவைப் பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளது என்றும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவைத் தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு கோரி  ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், ராஜித சேனாரத்னவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இந்நிலையில், ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்றுக் காலை ஆஜரானதைத் தொடர்ந்து அவரைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

பின்னர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...