Home தென்னிலங்கைச் செய்திகள் பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் தேங்கின!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் தேங்கின!

Share
Share

தினமும் மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் தேங்கி இருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு நிறுத்தப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அஞ்சல் ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்தக் குழு இன்னும் தகவல்களைச் சேகரித்து வருகிறது.

அடுத்த மாதம் 4 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதால், அடுத்த மாதம் 4 ஆம் திகதி அறிக்கை கிடைத்தால், அந்த திகதிக்குள் சேகரிக்கப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை சுமார் 16 மில்லியனாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...