Home தென்னிலங்கைச் செய்திகள் இந்தோனேசியாவில் கைதானவர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் கைதானவர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!

Share
Share

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலை நாளை ஞாயிற்றுக்கிழமை (31) இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று இந்தோனேசியாவுக்கு இன்று சனிக்கிழமை (30) சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் கைதுசெய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்வர்களில் ஒருவரான பக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (29) மாலை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பக்கோ சமனின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

ஏனைய 5 பேரையும் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...