Home தாயகச் செய்திகள் ‘போரின் சாட்சியம்’ டொரொன்டோவில் அறிமுகமாகிறது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

‘போரின் சாட்சியம்’ டொரொன்டோவில் அறிமுகமாகிறது!

Share
Share

இறுதிப்போரில் களத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் டொரொன்டோவில் நாளை (30-08-2025) நடைபெறவுள்ளது.

சுரேன் கார்த்திகேசு 2009ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முல்லைத்தீவின் வலைஞர் மடத்திற்கும் இரட்டைவாயக்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பணி நிமிர்த்தம் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்திருந்தார்.

போரின் பின்னர் தாய்லாந்திலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூலம் அகதியாக கனடாவைச் சென்றடைந்துள்ளார்.

கடல் பயணத்தின் போது, ஏற்கனவே அடைந்திருந்த காயத்தின் பாதிப்புக்களாலும் கப்பலில் போதிய மருத்துவ வசதிகள் இன்மையாலும் உயிராபத்தினையும் எதிர்கொண்டிருந்தார்.

ஏற்கனவே வன்கூவரில் வெளியாகியிருந்த குறித்த நூல் அறிமுக நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றிருந்தன.

இந்நிலையில்,

நாளை (30-08-2025) பிற்பகல் 5.30 மணிக்கு Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough ON, M1M 1R9 என்னும் முகவரியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...