Home தாயகச் செய்திகள் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!

Share
Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்காக நவம்பர் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிவான் த. பிரதீபன் முன்னிலையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, புதைகுழியில் இருந்து மீட்கப் பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் பணிமனையால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் கோரப்பட்டது.

இதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் 6 ஆம் திகதிக்கு நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி கொக்குத்தொடுவாய் மனித புதை குழி 2023 ஜீ_ன் மாதம் 29ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது. குடிதண்ணீர் விநியோகத்துக்காக குழாய் பொருத்துவதற்காக கிடங்கு வெட்டிய போது இந்தப் புதைகுழி வெளிப்பட்டது.

ஜூலை 6ஆம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பமாகின. 52 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணி நிறைவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென் கடல் பகுதியில் 839 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51...

கிளிநொச்சியில் 40 எறிகணைகள் மீட்பு!

கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை...

செவ்வந்தி கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை...

மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் முருங்கனில் ஒருவர் மரணம்!

மன்னார், முருங்கன் – இசமலாதவுல் பகுதியில் மணல்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர்உயிரிழந்துள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்....