Home தாயகச் செய்திகள் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி; வழக்கு ஒத்திவைப்பு!

Share
Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்காக நவம்பர் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

நீதிவான் த. பிரதீபன் முன்னிலையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, புதைகுழியில் இருந்து மீட்கப் பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் பணிமனையால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் கோரப்பட்டது.

இதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் 6 ஆம் திகதிக்கு நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி கொக்குத்தொடுவாய் மனித புதை குழி 2023 ஜீ_ன் மாதம் 29ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது. குடிதண்ணீர் விநியோகத்துக்காக குழாய் பொருத்துவதற்காக கிடங்கு வெட்டிய போது இந்தப் புதைகுழி வெளிப்பட்டது.

ஜூலை 6ஆம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பமாகின. 52 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணி நிறைவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...