Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை நடந்த அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

இதேநேரம், 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அரியாலை – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது பகுதியாக 36ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் நடைபெற்றன.

ஏற்கனவே, 169 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 8 எலும்புக் கூடுகள் புதிதாக கண்டறியப்பட்டன.

இதனால், அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்தது.

இதேபோன்று, நேற்றைய தினம் 6 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உயர்தர மாணவர்களில் 24 சதவீதமானோருக்கு மன அழுத்தம்!

இலங்கையில் உள்ள பாடசாலைகளில், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீதமானோர் மன அழுத்தத்திற்கு...

மிரட்டி கப்பம் பெற முயன்ற இருவருக்கு மட்டக்களப்பில் விளக்கமறியல்!

மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

நாட்டில் ஒரே நாளில் 4,539 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (15) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4,539 பேர்...

2026 இல் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் – லால் காந்த!

2026 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிமொழியை அமைச்சர் லால் காந்த...