Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை நடந்த அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

இதேநேரம், 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அரியாலை – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது பகுதியாக 36ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் நடைபெற்றன.

ஏற்கனவே, 169 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 8 எலும்புக் கூடுகள் புதிதாக கண்டறியப்பட்டன.

இதனால், அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்தது.

இதேபோன்று, நேற்றைய தினம் 6 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

திருமலைச் சிறையில் கஸ்ஸப தேதர் உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று...

புத்தர் சிலை வைத்த பிக்குகள் 4 பேர் உட்பட்ட 09 பேருக்கு திருமலையில் விளக்கமறியல்!

திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறாமல் கட்டடம் அமைத்து அங்கு, புத்தர் சிலையை வைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட...

யாழில் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிய பெண்!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...