Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை நடந்த அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

இதேநேரம், 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அரியாலை – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது பகுதியாக 36ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் நடைபெற்றன.

ஏற்கனவே, 169 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 8 எலும்புக் கூடுகள் புதிதாக கண்டறியப்பட்டன.

இதனால், அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்தது.

இதேபோன்று, நேற்றைய தினம் 6 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...