Home தாயகச் செய்திகள் சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தியில் மேலும் 08 மனித எலும்புக் கூடுகள்!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழியில் நேற்று வியாழக்கிழமை நடந்த அகழ்வில் 8 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

இதேநேரம், 6 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அரியாலை – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது பகுதியாக 36ஆவது நாளாக நேற்று அகழ்வு பணிகள் நடைபெற்றன.

ஏற்கனவே, 169 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில் நேற்றைய தினம் 8 எலும்புக் கூடுகள் புதிதாக கண்டறியப்பட்டன.

இதனால், அங்கு கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்தது.

இதேபோன்று, நேற்றைய தினம் 6 மனித எலும்புக்கூடுகள் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 164ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...