Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காகக் காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின் தனியார் வைத்தியசாலைக்குச் சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது.

அவருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமையால் அறுவைச் சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்குச் செல்லலாம். தேசிய வைத்தியசாலையில் காத்திருப்புப் பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும்.

எனவே, அவர் தனது சொந்தச் செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும்.

தற்போது, ​​அவருக்குக் கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது.

அந்த நிலை படிப்படியாகச் சரி செய்யப்பட்டு வருகின்றது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில்...

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம் – சிங்கப்பூர் தம்பதியினர் செய்து வைத்தனர்!

யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம்...

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...