Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

Share
Share

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது. இதனால் தான் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த அனைவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.

முன்னர் பாதாள உலக கும்பல்களுக்கு பல அரசியல்வாதிகள் துணைபுரிந்தனர்.எனவே தான் பாதாள உலக கும்பல்கள் எமது நாட்டில் பல குற்றச் செயல்களை மேற்கொண்டு பலத்துடன் இருந்தனர்.

ஆனால் புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது.

பாதாள உலக கும்பல்களை கைதுசெய்ய புதிய அரசாங்கம் பொலிஸாருக்கு பல உதவிகளை வழங்கியது.

பல அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை தாண்டி இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் காலங்களிலும் இந்த கைது நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில்...

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம் – சிங்கப்பூர் தம்பதியினர் செய்து வைத்தனர்!

யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம்...

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...