Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

Share
Share

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது. இதனால் தான் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த அனைவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்.

முன்னர் பாதாள உலக கும்பல்களுக்கு பல அரசியல்வாதிகள் துணைபுரிந்தனர்.எனவே தான் பாதாள உலக கும்பல்கள் எமது நாட்டில் பல குற்றச் செயல்களை மேற்கொண்டு பலத்துடன் இருந்தனர்.

ஆனால் புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது.

பாதாள உலக கும்பல்களை கைதுசெய்ய புதிய அரசாங்கம் பொலிஸாருக்கு பல உதவிகளை வழங்கியது.

பல அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை தாண்டி இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் காலங்களிலும் இந்த கைது நடவடிக்கைகள் தொடரும் என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...