Home தென்னிலங்கைச் செய்திகள் ரணிலுக்காகத் திரண்ட அனைவருக்கும் நன்றி- ஐ.தே.க. தெரிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரணிலுக்காகத் திரண்ட அனைவருக்கும் நன்றி- ஐ.தே.க. தெரிவிப்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக முன்னிலையான ஆதரவாளர்கள், ஏனைய கட்சியின் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஏனைய கட்சியினருக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நீதிமன்றத்தில் 500 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருந்தனர். பெருந்திரளான மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவை அனைத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். நீதித்துறையின் சுயாதீனத்தை நாம் எதிர்பார்த்தோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்காக நாம் முன்னின்றோம்.

எனினும், அதற்கு அப்பால் ஊழல், மோசடிக்கு ஆதரவாகப் போராடுபவர்கள் நாம் அல்லர். இவற்றை ஒழிப்பதற்காக நாம் தொடர்ந்தும் முன்னிற்போம். அதற்கான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...