Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பில் ரணிலுக்காக இன்று திரண்ட ஆதரவாளர்கள் ‘அநுர கோ ஹோம்’ எனக் கோஷம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பில் ரணிலுக்காக இன்று திரண்ட ஆதரவாளர்கள் ‘அநுர கோ ஹோம்’ எனக் கோஷம்!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி எதிர்க்கட்சியினர் மற்றும் ரணிலின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அநுர கோ ஹோம்” என்று விண்ணதிரக் கூச்சலிட்டனர்.

இதனால் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தால் கொழும்பு கோட்டை முதல் லேக் ஹவுஸ் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கொம்பனி வீதி உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

குளியாப்பிட்டியில் கோர விபத்து! மாணவர்கள் இருவர் உட்பட மூவர் பலி!!

குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை...

தென்னக்கோனுக்கு பிணை!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்...

ரணில் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல என்கிறது அரசாங்கம்!

பொதுச் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவது குற்றம் எனவும் அதற்காக கைதுசெய்யப்படுவது அரசியல் பழிவாங்கலாக அமையாது எனவும்...