Home தாயகச் செய்திகள் முத்தையன்கட்டு கொலை; இராணுவத்தினர் நால்வருக்கும் பிணை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

முத்தையன்கட்டு கொலை; இராணுவத்தினர் நால்வருக்கும் பிணை!

Share
Share

முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் நால்வருக்கும் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 7 ஆம் திகதியன்று முத்தையன்கட்டு பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறையினரால், இராணுவத்தினர் நால்வர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றபோது, இராணுவத்தரப்பு சட்டத்தரணியால் பிணைக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

எனினும் மனுதாரர் தரப்பு இதனைக் கடுமையாக ஆட்சேபித்தது. 

எனினும், கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த இராணுவத்தினர் நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ். வரும் ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியை நேரில் பார்வையிடலாம் – அமைச்சர் சந்திரசேகர் தகவல்!

வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி...

நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை கைது செய்யுமாறு சி.ஐ.டிக்கு உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது...

மின்சார சபை ஊழியர்களுக்கு சலுகை!

இலங்கை மின்சார சபையின் தற்போதைய ஊழியர்கள் தங்கள் விருப்பப்படி நான்கு நிறுவனங்களில் ஒன்றிற்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்க...

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு – சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக்...