Home தென்னிலங்கைச் செய்திகள் ஆலயங்களில் தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டுவந்த பெண்கள் எண்மர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆலயங்களில் தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டுவந்த பெண்கள் எண்மர் கைது!

Share
Share

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்கள் எண்மர் கொண்ட குழுவை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான பெண்களில் இருவர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கைதான குழு நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மடு மாதா தேவாலயத் திருவிழாக்களை இலக்கு வைத்தே வடக்குக்கு வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆலயத் திருவிழாக்களில் பொதுவாக வடக்கில் பெண்கள் அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வருவது வழமை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே மேற்படி குழு நகைக் களவில் ஈடுபட்டது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், மடு மாதா தேவாலயத் திருவிழாவில் 10 இற்கும் மேற்பட்ட
பெண்களின் தங்க நகைகள் களவாடப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 75 இலட்சம் ரூபாயிலும் அதிகமாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆண்கள் இருவரும் பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் கைதான பெண்கள் குழுவுக்கும் மடுவில் கைதான பெண்கள் குழுவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பெண்களுடன் கைதானவர்கள் குறி சொல்லும்தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்கள் சிலாபம், தம்புதேகம பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...

திருமலை விவகாரம்; பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான...