Home தாயகச் செய்திகள் யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழ்.மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

Share
Share

யாழ்ப்பாணம் நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா நாளைய தினம் இடம்பெறவுள்ளது. 

இதனையொட்டி பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர். 

இதன்பிரகாரம், நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர், உடனடியாக பணிப்புரை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வழக்குகள் தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை!

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. ...

வலி. வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் வலிந்து தவிர்க்கப்பட்டு வருவது ஏன்? – சபையில் சிறீதரன் எம்.பி. கேள்வி!

“நாட்டில் போர் முடிவடைந்து  16 ஆண்டுகள் கடந்துள்ள பின்னரும், வலிகாமம் வடக்கு பிரதேச மக்களின் மீள்குடியேற்றம்...

விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறும் மஹிந்த – தங்காலையில் வரவேற்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறவுள்ளார்...

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை – சபையில் கருணாதிலக!

“பல்வேறு காரணிகளால் இடம்பெயர்ந்தவர்களை அவர்களின் சொந்தக் காணிகளிலேயே மீள்குடியேற்ற வேண்டும் என்ற கொள்கைகளுடனேயே அரசாங்கம் செயற்படுகின்றது....