முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும் பரந்தன் – கரைச்சி, முல்லைத்தீவு வீதியின் பாலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் களப்புக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இறுதியாகத் திருத்தப்பட்டுள்ள குறித்த பாலம் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால், வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் இருவழிப் பாதையுடன் கூடிய புதிய பாலமாக அதனை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக, தேசிய விலைமனு கோரல் முறைமையின் அடிப்படையில் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
Leave a comment