Home தென்னிலங்கைச் செய்திகள் அனுமதிக்கான தாமதம்; துறைமுகங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அனுமதிக்கான தாமதம்; துறைமுகங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்!

Share
Share

அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 15க்கு முன்னரான 45 நாட்களுக்குள் 8,726 வாகனங்கள் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 200 வாகனங்கள் இன்னும் கணக்கில் வராமல் இருப்பதாகவும் தெரிவித்தார். 

அதிகரித்து வரும் தாமதச் செலவுகள் இறுதியில் பொதுமக்களுக்குச் சுமையாக மாறும் என்றும் அவர் எச்சரித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...