Home தென்னிலங்கைச் செய்திகள் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்!

Share
Share

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி சர்வதேச மன்னிப்புச்சபை தமது சமர்ப்பணங்களை நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை திருத்தியமைப்பது தொடர்பில் அவதானிப்புக்கள், கருத்துக்கள், பரிந்துரைகளை தமக்கு அனுப்பிவைக்குமாறு நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான குழுவின் செயலாளர் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் உள்ளடங்கலாக பொதுமக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ள பொது அறிவித்தலில் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்துதல் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, இலக்கம் 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10 எனும் முகவரிக்கோ அல்லது டநபயடளூஅழத.பழஎ.டம என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இவ்வறிவிப்பு வெளியானதன் பின்னர் இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்திய அலுவலகத்துக்கான உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்று செய்யப்பட்டுள்ளது.

அப்பதிவில் ‘2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான பரிந்துரைகளை அனுப்பிவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பொது அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அச்சட்டத்தை உடனடியாக முற்றாக நீக்குமாறு வலியறுத்தி நாம் எமது நிலைப்பாட்டை அனுப்பிவைத்துள்ளோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் சண்டா பார்பரா (USS Santa Barbara) என்ற கப்பல் விநியோக...

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று...

ஜனாதிபதியைச் சந்தித்தபுதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார...

மின்சாரசபையின் பொறியியலாளர்களில் 20 வீதமானோர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வு!

இலங்கை மின்சார சபையின் (CEB) பொறியியலாளர்களில் 20% பேர் கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து,...