Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!

Share
Share

இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த பரிந்துரைக்கு அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்துப் பொலிஸ்மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்துப் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரைப் புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிந்துரைத்து அரசமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.

இந்தநிலையிலேயே பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...