Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த!

Share
Share

இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக, தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த பரிந்துரைக்கு அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசமைப்பு பேரவை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று பிற்பகல் கூடியிருந்த நிலையில், இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்துப் பொலிஸ்மா அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்துப் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரைப் புதிய பொலிஸ்மா அதிபர் பதவிக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பரிந்துரைத்து அரசமைப்பு பேரவைக்கு அனுப்பியிருந்தார்.

இந்தநிலையிலேயே பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு  நாம் சதி செய்யவில்லை – எதிரணி தெரிவிப்பு!

“ஆட்சியைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை” – என்று...

எம்.வி.சன்சியின் 15 ஆண்டு நிறைவை ஒட்டி பொது அறிவுப் போட்டி!

எம்.வி.சன்சி 15 ஆவது வருட நிறைவினையொட்டி நடாத்தப்படும் பொது அறிவுப்போட்டிக்கான பதிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடாவில்...

மன்னாரில் காற்றாலை அமைப்பு ஒரு மாதத்துக்கு இடைநிறுத்தம்!அதன் பின்னர் அது நடக்குமாம்!

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைப்பதுடன்,...

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...