Home தாயகச் செய்திகள் புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

புங்குடுதீவில் கத்திக்குத்துத் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

Share
Share

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

புங்குடுதீவு, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மீது சரமாரியாக கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்ட நபரைப் பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தாக்குதலாளி தப்பிச் சென்றுள்ளார்

தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு...

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சுமந்து சென்ற MV Sun Sea கப்பல் கனடாவை அடைந்து 15 ஆண்டுகள் நிறைவு!

தாயகத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் ஏதிலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 492 பேரை கடல்வழியாக சுமந்து சென்ற...