Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

Share
Share

மட்டக்களப்பு, கொக்குவில் – சவுக்கடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியவர் இரவாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அநுரவைச் சந்தித்த ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல்...

மட்டக்களப்பில் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூகச்  செயற்பாடுகளுக்கான நீதி கோரும் கவனவீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை...

இந்த அருமையான வாய்ப்பை அரசு கோட்டை விடக் கூடாது! ஐ.நா. மனித உரிமைகள் ஆணையளார் இலங்கையிடம் அழுத்தமான கோரிக்கை!

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குத் தண்டனை விலக்களிப்பு...

புலம்பெயர் ஈழத்தமிழர்களைச் சுமந்து சென்ற MV Sun Sea கப்பல் கனடாவை அடைந்து 15 ஆண்டுகள் நிறைவு!

தாயகத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் ஏதிலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 492 பேரை கடல்வழியாக சுமந்து சென்ற...