Home தாயகச் செய்திகள் திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

திருமலையில் இரு குழுக்களிடையே மோதல்; இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

Share
Share

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டு அங்கிருந்து வெளியேறிய வேளை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

திருகோணமலை, மடத்தடி – கிருஷ்ணர் ஒழுங்கையைச் சேர்ந்த டி.எச். வினோத் (வயது 33) என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விருந்து நடைபெற்ற ஹோட்டலில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த இளைஞருக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையிலான பழைய தகராறுதான் இந்த மோதலுக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் குத்தப்பட்டு இறந்தவரின் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும் காணப்படுகின்றது.

திருகோணமலை பொலிஸ் பிரிவு பதில் உதவி அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க தலைமையிலான தலைமையகப் பொலிஸார், இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

முதலமைச்சருக்கு போட்டியிட விரும்புகிறேன் என்கிறார் சுமந்திரன்!

வடக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன் என்று இலங்கை தமிழ் அரசு...

கூரிய வாள்கள், ஐஸ் போதைப்பொருள்களுடன் வீட்டில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது!

சந்தேகத்துக்கிடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த 19 பேர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து...

பலத்த பாதுகாப்புடன் நல்லூர் கந்தனை வழிபட்ட பிரதமர்! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டில்...

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக நான்கு மனித என்புத்...