Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி மனிதப் புதைகுழி; சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி மனிதப் புதைகுழி; சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை!

Share
Share

அரியாலை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வுப் பிரிவின் மனிதகொலை விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யாழ்.நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரை அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்றுப்பொருட்கள் வைக்கப்படவுள்ளன.

அரியாலை புதைகுழிகளில் இருந்து இதுவரை புத்தகப் பை , சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போச்சி, வளையல்கள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினைப் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, அவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்கள் நீதிமன்றுக்கோ, குற்றப் புலனாய்வுத் துறையினருக்கோ
தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை சான்றுப் பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம்,...

583 கிலோ பீடி இலைகளுடன் கைப்பற்றப்பட்ட டிங்கிப் படகு!

இலங்கைக் கடற்படையினர் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குக்...

யாழில் வாள்வெட்டு!ஒருவர் படுகாயம்!

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்...

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் ஒப்பமிடப் போவதில்லை – தமிழரசுக்கட்சி அறிவிப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட...