Home தென்னிலங்கைச் செய்திகள் OTP தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

OTP தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Share
Share

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் வட்ஸ்அப் பயனர்களைக் குறிவைத்து மோசடி திட்டங்கள் இடம்பெறுவதாகக் பொலிஸ் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

சைபர் குற்றவாளிகள், குரல் அழைப்புகள் மற்றும் ஏமாற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத வட்ஸ்அப் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி, தனிநபர்களை ஏமாற்றி, அவர்களின் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களைப் பகிர்ந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் வட்ஸ்அப் கணக்கை முழுமையாக அணுகி, பயனரைப் போல ஆள்மாறாட்டம் செய்து, அவர்களின் தொடர்புகளுக்குப் போலி செய்திகளை அனுப்பி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

அதன்படி, இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து வெளிவருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாலைதீவு செல்லும் இலங்கையர்களுக்கு இலவச சுற்றுலா விஸா!

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு 90 நாள் இலவச சுற்றுலா விஸாக்களை வழங்க...

இலங்கைக்கு 20 சதவீதம் வரி; அமெரிக்கா அறிவிப்பு!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்த வரி...

செம்மணியில் இதுவரை 118 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...

ஆட்சி மாற்றம் திடீரென நடக்கலாம் – மொட்டுவின் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சொல்கின்றார்!

“ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில்...