Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க் கிழமையும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 01, தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 02 என்று அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளில் தொடர்ந்த ஆய்விலேயே நேற்றைய தினம் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இவற்றுடன், இந்த மனிதப் புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின்
எண்ணிக்கை 111ஆக அதிகரித்தது.

இதேநேரம், நேற்றைய தினம் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. இவற்றுடன், இதுவரை 99 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 33ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாலைதீவு செல்லும் இலங்கையர்களுக்கு இலவச சுற்றுலா விஸா!

சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு 90 நாள் இலவச சுற்றுலா விஸாக்களை வழங்க...

இலங்கைக்கு 20 சதவீதம் வரி; அமெரிக்கா அறிவிப்பு!

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்த வரி...

செம்மணியில் இதுவரை 118 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள்...

ஆட்சி மாற்றம் திடீரென நடக்கலாம் – மொட்டுவின் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சொல்கின்றார்!

“ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில்...