Home தாயகச் செய்திகள் மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

Share
Share

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நேற்று செவ்வாய்க் கிழமையும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 01, தடயவியல் அகழ்வாய்வு தளம் இல. – 02 என்று அடையாளப்படுத்தப்பட்ட புதைகுழிகளில் தொடர்ந்த ஆய்விலேயே நேற்றைய தினம் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இவற்றுடன், இந்த மனிதப் புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின்
எண்ணிக்கை 111ஆக அதிகரித்தது.

இதேநேரம், நேற்றைய தினம் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் புதைகுழிகளிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டன. இவற்றுடன், இதுவரை 99 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 33ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...