Home தாயகச் செய்திகள் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் கொலை – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் கொலை – யாழ்ப்பாணத்தில் பரபரப்பு!

Share
Share

யாழ்ப்பாணத்தில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் – 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சாந்தலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்தவரது சகோதரி வழங்கிய வாக்குமூலத்தில்,

“நான் குறி சொல்லும் வேலை செய்து வருகின்றேன். இரவு மூவர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். அவர்களுக்குத் தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற வேளை அவர்கள் உள்ளே வந்து என்னைக் கட்டிப் போட்டு விட்டு நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

பின்னர் அதிகாலை 3 மணியளவில் நான் கட்டை அவிழ்த்துவிட்டு வெளியே வந்து பார்த்த வேளை தம்பி சடலமாகக் காணப்பட்டார்.” – என்று கூறியுள்ளார்.

இருப்பினும் மேற்படி பெண் வழங்கிய வாக்குமூலத்தில் திருப்தியடையாத பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகல்!

கற்றல் நடவடிக்கைகளிலிருந்து கடந்த மூன்று வருடங்களில் மாணவர்கள் 20 ஆயிரம் பேர் இடைவிலகினர் என்று கல்வி,...

பாம்பு தீண்டி யாழில் இளைஞர் மரணம்!

இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்பாம்பு தீண்டி உயிரிழந்தார். புத்தூர் மேற்கில்...

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம்?

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக உள்ளதாக வலி. தெற்கு...

சம்பூரில் மனித என்பு எச்சங்கள்: அகழ்வு செய்வதா? இல்லையா? ஓகஸ்ட் 6 ஆம் திகதி விசேட கூட்டம் – மூதூர் நீதிமன்றம் இன்று தீர்மானம்!

திருகோணமலை, சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வு செய்வதா? இல்லையா? என்பதைத்...