Home தென்னிலங்கைச் செய்திகள் யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மனைவி, மகள் மூவரும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், மனைவி, மகள் மூவரும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்பு!

Share
Share

கண்டி மாவட்டம், யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (ஐக்கிய மக்கள் சக்தி) சம்பிக விஜேரத்ன (வயது – 53), அவரது மனைவி (வயது – 44) மற்றும் மூத்த மகள் (வயது – 16) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதனைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டுக்குள் வெவ்வேறான இடங்களிலேயே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

இளைய மகள் உயிர் தப்பியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

இவர்கள் தற்கொலை செய்துகொண்டனரா அல்லது இது கொலைச் சம்பவமா என்ற கோணத்தில் பேராதனைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...