Home தென்னிலங்கைச் செய்திகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

Share
Share

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அதன்போது, நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மாலைத்தீவு சென்றுள்ளமையினால் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஒரே விமானத்திலேயே நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

OTP தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி அழைப்புகள் மற்றும் செய்திகள்...

சாதாரண தரப் பெறுபேறு இன்றி உயர்தர தொழிற்கல்வியில் இணைய வாய்ப்பு!

2025-2026 கல்வியாண்டிற்கான தரம் 12 உயர்தர தொழிற்கல்வி பிரிவுக்குச் சேர்வதற்கான விண்ணப்பங்களைக் கல்வி அமைச்சு கோரியுள்ளது. ...

யாழில் வாள்வெட்டுச் சம்பத்தில் ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை ஓட்டோவில் வந்த மூவர் குழு வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது....

மனிதப் புதைகுழி; எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 111!

அரியாலை மனிதப் புதைகுழிகளிலிருந்து நேற்றைய தினமும் 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம்...