Home தாயகச் செய்திகள் மேலதிக அரச அதிபர்கள் இருவர் மன்னார் மாவட்டத்துக்கு நியமனம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மேலதிக அரச அதிபர்கள் இருவர் மன்னார் மாவட்டத்துக்கு நியமனம்!

Share
Share

மன்னார் மாவட்டத்துக்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள் நேற்று பொது நிர்வாக அமைச்சால்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மனோகரன் பிரதீப் மேலதிக அரச அதிபராக (நிர்வாகம்)  நியமிக்கப்பட்டுள்ளார்.

2012 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, 2013 தொடக்கம்  2015 வரை உதவி பிரதேச செயலாளராக மாத்தளை மாவட்டம், ரத்தோட்டை  பிரதேச செயலகத்திலும்,  2015 முதல் 2020 வரை  உதவி பிரதேச செயலாளராக கண்டாவளைப் பிரதேச செயலகத்திலும், 2020 தொடக்கம் பிரதேச செயலாளராக மன்னாரிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதேபோன்று மேலதிக அரச அதிபராக (காணி) கீ.பீட் நிஜாகரன் நியமிக்கக்பட்டுள்ளார்.

இவர் 2013 இல் இருந்து 2020-08-09 வரை திருகோணமலை உதவி காணி ஆணையாராகவும் (மாகாணங்களுக்கு இடைப்பட்டது), 2020-08-10இருந்து 2021-01-19வரை முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும், 2021-01-20 இருந்து 2021-02-28 வரை மன்னாரில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும், 2021-03-01 முதல் மடுப் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம் – எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்!

யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்...

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தி தமிழருக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – அநுர அரசிடம் சஜித் அணி வலியுறுத்து!

“மாகாண சபை முறைமை என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அந்தத் தேர்தலை...

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர்...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...