Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜிதவின் முன் பிணை மனு ஆகஸ்ட் 7 இல் விசாரணைக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ராஜிதவின் முன் பிணை மனு ஆகஸ்ட் 7 இல் விசாரணைக்கு!

Share
Share

தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை செய்து தன்னைப்  பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என  கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்துக்கு ஒப்படைத்து அரசுக்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நட்டத்தை ஏற்படுத்தினார் எனக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவெல கடந்த 11 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்தார்.

ஆனால், கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த முன் பிணை மனுவைக்  கடந்த 18 ஆம் திகதி நிராகரித்தது.

தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள் பரிசீலனை செய்து தன்னைப்  பிணையில் விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திகா காலிங்கவம்ச  முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட முன் பிணை மனுவைக் கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி நிராகரித்திருந்தார். ஆனால், இந்த முன் பிணை மனுவை நிராகரிப்பதற்கான சாட்சியங்களை நீதிவான் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறினார்.

இதனைக் கருத்தில்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திகா காலிங்கவம்ச, இந்த மனு தொடர்பில் அறிக்கை ஒன்றைச்  சமர்ப்பிக்குமாறு கோரி உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த மனு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...