Home தென்னிலங்கைச் செய்திகள் திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!

Share
Share

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைமறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் செல்லவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மாலைதீவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைகின்றது.

1965 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து 60 ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடுவதால், இந்த உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலைதீவு – இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒப்பந்த பேச்சுவார்தையும் நடத்தப்படவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...