Home தாயகச் செய்திகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்குகஞ்சா கடத்தும் முயற்சி முறியடிப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்குகஞ்சா கடத்தும் முயற்சி முறியடிப்பு!

Share
Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, ஆழியவளையில் இருந்து இந்தியாவுக்குச் சட்டவிரோதமாக படகில் சென்ற இருவர் கடலூர் கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வரும் நோக்கில் படகில் சென்றுள்ளனர் என்று இந்தியப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் கஞ்சா கடத்தப்படுகின்றது என்று இந்தியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையின்போது கடலூர் கடற்கரையில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் 300 கிலோ கஞ்சாவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

கைது செய்த மூவரிடமும் இந்தியப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் படகுக்கு வழங்கவே கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடலூர் கடற்கரையில் மறைந்திருந்த இந்தியப் பொலிஸார் யாழ். ஆழியவளையில் இருந்து சென்ற படகை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது படகில் இருந்த இரு இலங்கைரையும் இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...