Home தாயகச் செய்திகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்குகஞ்சா கடத்தும் முயற்சி முறியடிப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்குகஞ்சா கடத்தும் முயற்சி முறியடிப்பு!

Share
Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, ஆழியவளையில் இருந்து இந்தியாவுக்குச் சட்டவிரோதமாக படகில் சென்ற இருவர் கடலூர் கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வரும் நோக்கில் படகில் சென்றுள்ளனர் என்று இந்தியப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் கஞ்சா கடத்தப்படுகின்றது என்று இந்தியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையின்போது கடலூர் கடற்கரையில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் 300 கிலோ கஞ்சாவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.

கைது செய்த மூவரிடமும் இந்தியப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் படகுக்கு வழங்கவே கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடலூர் கடற்கரையில் மறைந்திருந்த இந்தியப் பொலிஸார் யாழ். ஆழியவளையில் இருந்து சென்ற படகை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதன்போது படகில் இருந்த இரு இலங்கைரையும் இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர்...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...