Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜிதவின் முன் பிணை மனு: 30 ஆம் திகதி விசாரணைக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ராஜிதவின் முன் பிணை மனு: 30 ஆம் திகதி விசாரணைக்கு!

Share
Share

முன் பிணையில் விடுவிக்க மறுத்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சீராய்வு செய்து தன்னைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 30ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு நேற்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

முன் பிணையை நிராகரித்த கொழும்பு நீதிவான் நீதிமன்றத் தீர்ப்பின் நகல் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், இந்த மனு தொடர்பாக உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்று மேல் நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இதன்படி, குறித்த முன் பிணை மறுப்பு தீர்ப்பின் நகலைச் சமர்ப்பித்த பின்னர், இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மனு மீதான பரிசீலனை எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...

மேலதிக அரச அதிபர்கள் இருவர் மன்னார் மாவட்டத்துக்கு நியமனம்!

மன்னார் மாவட்டத்துக்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரச அதிபர்கள் நேற்று பொது...