Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி புதைகுழி; மேலும் 05 மனித எச்சங்கள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி புதைகுழி; மேலும் 05 மனித எச்சங்கள் மீட்பு!

Share
Share

யாழ்ப்பாணம் – சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாவது அமர்வில், மூன்றாம் நாள் அகழ்வு பணிகள் இன்று இடம்பெற்றன.

புதிதாக 05 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் 20 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் இரண்டு மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக இதுவரையில் 85 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களில் 67 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், உடைந்த காப்பு உள்ளிட்ட சில சான்று பொருட்களும் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனிதப் புதைகுழி; எலும்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது இரண்டு மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக...

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில்குழந்தையின் எலும்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின்...

நல்லூர் கந்தனுக்குச் செவ்வாய் கொடியேற்றம் – ஏற்பாடுகள் மும்முரம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குக்...

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் நிலைய விசாரணைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில்...