Home தாயகச் செய்திகள் வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வட்டுக்கோட்டை வன்முறை; நடந்தது என்ன? (படங்கள்)

Share
Share

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்று இரண்டு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வன்முறையைக்  கட்டுப்படுத்தினர். அத்துடன் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டது.மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட தர்க்கம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சினை மீண்டும் தலைதூக்கிய நிலையில், அது அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் பிரச்சினையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர்.

அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டது. மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதையடுத்துப் பொலிஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அந்தப் பகுதியில் குழுமியிருந்தவர்களைத் துரத்தினர்.

அத்துடன் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரைப் பொலிஸார் கைது செய்தனர். பலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் மூளாய் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப்  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...