Home தென்னிலங்கைச் செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

Share
Share

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் நளிந்தவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.

விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையேயான மோதலே துப்பாக்கிச்சூடுகளுக்குக் காரணம் – அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவிப்பு!

தெற்கில் பாதாளக் குழுக்களுக்கிடையிலான மோதல்களே தொடர்ச்சியான  துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என்று பொதுமக்கள்...

நாளை கூடும் நாடாளுமன்றம் – வெள்ளி வரை அமர்வுகள்!

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. நாடளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அடியோடு முடிவு கட்ட வேண்டும் – சிறீதரன் வலியுறுத்து!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள...

கிழக்கின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆளுருடன் இராணுவத் தளபதி பேச்சு!

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால்...