Home தாயகச் செய்திகள் வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது!

Share
Share

வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுண்டிக்குழிப் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், ஒரு தொகுதி நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 42 வயதான இந்தச் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து வந்தபோது யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

திருடப்பட்ட நகைகள் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...

எங்கள் கட்சி விவகாரங்களில் தலையிடவேண்டிய அவசியமில்லை – தேசிய மக்கள் சக்திக்க சி.வி.கே அறிவுரை!

சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பில் – கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி...