Home தாயகச் செய்திகள் வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வீடு உடைத்துத் திருடியவர் 4 ஆண்டுகளின் பின் கைது!

Share
Share

வீடு உடைத்து நகைகள் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் நான்கு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுண்டிக்குழிப் பகுதியில் வீடொன்று உடைக்கப்பட்டு 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், ஒரு தொகுதி நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

சாவகச்சேரியைச் சேர்ந்த 42 வயதான இந்தச் சந்தேகநபர் நேற்றுமுன்தினம் கொழும்பில் இருந்து வந்தபோது யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

திருடப்பட்ட நகைகள் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழ். பிரதேசத்தில் 1996 – 97 இல் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விசாரணை அறிக்கை கிட்டியது!

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஜூலை 21 ஆம் திகதி மீள ஆரம்பம்!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம்...

போர்க்கால அறிவிப்பாளர் சத்தியாவின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலிகளின் குரல் வானொலியின் பிரபல அறிவிப்பாளராக செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்)...

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து தடை!

வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16.07.2025) காலை...