Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த தேர்தலுடன் சஜித்தின் கட்சி ‘அவுட்’! – சரத் பொன்சேகா!
தென்னிலங்கைச் செய்திகள்

அடுத்த தேர்தலுடன் சஜித்தின் கட்சி ‘அவுட்’! – சரத் பொன்சேகா!

Share
Share

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பத்து இலட்சம் வாக்குகளை மட்டுமே பெறும் என்றும், இது முன்னைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறிக்கின்றது.

முதலில் குமார வெல்கம வெளியேறினார். பின்னர் சம்பிக்க, ராஜித, தலதா மற்றும் பொன்சேகா ஆகியோர் வெளியேறினர்.

மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக்கொண்டு, ஆமாம் போடுபவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இந்தநிலையில், அத்தகையவர்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தை முன்னெடுப்பது கடினமான காரியம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனித புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம் – அரசாங்கம்!

காணாமல் போனோருக்கு இழப்பீடு வழங்குவதை மாத்திரம் இலக்காகக் கொண்டு முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அவர்களுக்கு...

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...