Home தாயகச் செய்திகள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!

Share
Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமையை அவர் முழுமையாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருந்தார்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணமாகிறார்!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும்...

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...

பரீட்சைப் பெறுபேறுகளில் இறுதி இடத்தைப் பெற்றது வடக்கு!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.86...

வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸார் துரத்தியதால் நபர் ஒருவர் மரணம்! மக்கள் திரண்டதால் பதற்றம்!

வவுனியா மாவட்டம் கூமாங்குளம் பகுதியில் கடந்த இரவு போக்குவரத்து பொலிசார் துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் சில்லுக்குள்...