Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி சிறார்கள் மூவர் பலி!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மட்டக்களப்பில் வாவியில் மூழ்கி சிறார்கள் மூவர் பலி!

Share
Share

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி வாவியில் மூழ்கி, மூன்று சிறார்கள் உயிரிழந்துள்ளனர். 

கருவப்பஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 10 வயதான, மூன்று சிறார்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்களில் இரண்டு சிறுமிகளும், ஒரு சிறுவனும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். 

நீதவான் விசாரணைகளின் பின்னர், உயிரிழந்த சிறார்களின் உடலங்களை வாழைச்சேனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மீன் பதனிடும் வாடிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், மூன்று சிறார்களும் வாவிக்குள் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....

சுண்டிக்குளத்தில் இரகசியமான முறையில் காணி அளவீடு!

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் ஜே/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால்...

தமிழரசின் பெருந்தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை...