Home தாயகச் செய்திகள் சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சிறையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்!

Share
Share

சிறைச்சாலைகளில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூரும் வகையில், யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணம் கிட்டு பூங்கா சுற்று வட்டத்தில், எதிர்வரும் 24 ஆம், 25 ஆம் திகதிகளில், இந்தநினைவேந்தல் நடத்தப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், பல ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டனர்.

அவர்களில் பலர், சிறைச்சாலைகளிலேயே கொல்லப்பட்டதுடன், மேலும் சிலர் இன்று வரையில் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

எனவே, இந்த நினைவேந்தல் நிகழ்வின் ஊடாக, சிறைச்சாலைகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அதேநேரம், இன்று வரை சிறையிலே வாடும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்த உள்ளதாகக் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சித்துப்பாத்தி மயானம் எங்கும் புதைகுழிகள் – சிரமதானத்தின்போது எலும்பு எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ...

இரண்டு கோடி ரூபா பெறுமதியானகேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது!

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி மன்னாரில் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள...

மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிள் இன்றைய அகழ்வின் போது 5 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....