Home தென்னிலங்கைச் செய்திகள் மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம் என்கிறார் நாமல்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக அணிதிரள்வோம் என்கிறார் நாமல்!

Share
Share

மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம் எனறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களளிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களின் உண்மையான பிரச்சினைகளை மூடி மறைத்து அடக்குமுறை ஊடாக ஆட்சியை முன்னெடுப்பதற்கு அரசு முற்படுகின்றது.

ஆரம்பத்தில் ராஜபக்ஷக்களைக் கள்வர்கள் என்றார்கள், அதன்பின்னர் 225 பெரும் கள்வர்கள் என்றார்கள், தற்போது ஒட்டுமொத்த அரச ஊழியர்களையும் கள்வர்கள் என்கிறார்கள்.

வைத்தியர்களுக்கும் இன்று அதே பட்டம் சூடப்பட்டுள்ளது. அடுத்து சட்டத்தரணிகள் இலக்கு வைக்கப்படுவார்கள். இறுதியில் வாக்களித்தே மக்களை அடக்கி ஆள முற்படுவார்கள்.

நாட்டில் பல பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. எனினும், அரச அதிகாரிகள்மீது பழிபோட்டுவிட்டு தமது இயலாமையை மூடிமறைப்பதற்கு அரசு முற்படுகின்றது. மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம்.

நாட்டில் தேசிய பாதுகாப்பை அரசு வீழ்த்தியுள்ளது. இதைப் பற்றி கதைப்பது இனவாத்தைத் தூண்டும் செயல் என்ற விம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...