Home தாயகச் செய்திகள் செம்மணிப் புதைகுழியில் இன்று மேலும் 3 எலும்புக்கூடுகள் – இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

செம்மணிப் புதைகுழியில் இன்று மேலும் 3 எலும்புக்கூடுகள் – இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன!

Share
Share

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின்போது மேலும் மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் பத்தாம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 42 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ஞா.ரனித்தா மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர்.

மேலும் இன்றைய அகழ்வுப்பணிகளின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் மற்றும் தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் வருகை தந்து அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்களை அவதானித்துச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சித்துப்பாத்தி மயானம் எங்கும் புதைகுழிகள் – சிரமதானத்தின்போது எலும்பு எச்சங்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சூழ...

இரண்டு கோடி ரூபா பெறுமதியானகேரள கஞ்சா மன்னாரில் சிக்கியது!

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி மன்னாரில் 2 கோடி ரூபா பெறுமதியான கேரள...

மேலும் ஐந்து எலும்புத் தொகுதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிள் இன்றைய அகழ்வின் போது 5 எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம்...

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....