Home தாயகச் செய்திகள் வன்னியின் மூத்த செய்தியாளர் ந.கிருஷ்ணகுமார் காலமானார்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வன்னியின் மூத்த செய்தியாளர் ந.கிருஷ்ணகுமார் காலமானார்!

Share
Share

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் செய்தியாளராக பணியாற்றிய ந.கிருஷ்ணகுமார் இன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

90களின் இறுதிக் காலம் தொடக்கம் புலிகளின்குரல் வானொலியின் செய்தியாளராக இணைந்த கிருஷ்ணகுமார் போர் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் வானொலியின் அலுவலக செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார்.

போர் மிகத் தீவிரம் பெற்றிருந்தபோதும் கிருஷ்ணகுமார் களச் செய்தி சேகரிப்பில் தயக்கமின்றிச் செயற்பட்டிருந்தார்.

வானொலியில் ஒலிபரப்பாகிய ஊர்சுற்றும் ஒலிவாங்கி நிகழ்ச்சிக்காக ஏராளமான நேர்காணல்களை பதிவு செய்திருந்தார்.

போருக்குப் பின்னரும்  தினக்குரல், வலம்புரி, தமிழ்மிரர் உட்பட்ட ஊடகங்களுக்கான செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்றும் அவருடைய இறுதிச் சடங்கு அக்கராயனில் உள்ள அவருடைய இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையைப் பிரிக்கும் முயற்சி தொடர்கின்றது- இந்தியாவை சாடுகிறார் தம்மரத்ன தேரர்!

இலங்கையைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்கின்றது என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர்...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை...